பயணம்

•அக்டோபர் 6, 2007 • 5 மறுமொழிகள்

payanam.jpg

என்ன காரணம்
என்று சரியாகத் தெரியவில்லை
எப்போதும் சண்டைபோடுவது
ஜன்னலோர இருக்கைக்காக மட்டுமே…
பேருந்திலும்
இரயில் பயணத்திலும்.
எப்போதும் தேவைப்படுகிறது
ஜன்னலோர இருக்கை…

பயணத்தின் வேகத்தை
உணர்த்துவதாலோ,
அல்லது
கண்களை கலங்க வைக்கும்
காற்றின் வாசனையை
முகர்வதாலோ,
அல்லது
ஓயாது ஓடிக்கொண்டிருக்கும்
சிந்தனைத் தேரின்
ஓட்டத்தை அதிகரிப்பதாலோ,
தெரியவில்லை….
ஜன்னலோர இருக்கையே
பிடித்தலாக இருக்கிறது….
பயணங்கள் என்றுமே
சலிப்பதில்லை…
ஜன்னல் இருக்கும்வரையாவது….

மழை

•செப்டம்பர் 28, 2007 • 9 மறுமொழிகள்

rain1.jpg

நான் வெளியே வந்ததும்,
வேகமாய்
எட்டிப் பார்த்தது
ஒரு குட்டித் துளி,
வசமாக மாட்டிக்கொண்டாய்,
இசையாக நனைத்துவிடுகிறேன் என்று,
சத்தமாக மொத்தமாய்
கொட்டித் தீர்த்துவிடத்
துடித்ததோ என்னவோ,
தாயைப் பார்த்த
கன்றினைப் போல்
துள்ளித் திரிந்துதான்
என் மேல் படர்ந்தது…..

சிலுசிலுவென்று இதமாய்
மனதினில் நுழைந்து,
ஆளரவமற்ற மலைகளின்
ஓரமாய் ஓடும்
நதியின் அலைகளை,
மெலியதாய் அசைத்து,
தேகம் குளிராமல்
வருடிச்செல்லும் காற்றும்,
இசைவாய்ப் பறந்தபோது,
சில்லறையாய் நனைந்த நான்
மொத்தமாய் நனையத் தொடங்கினேன்….

வழிமறித்து மனதை
கொள்ளை கொள்ளும்
மழையை எதுர்த்து
எதுவும் செய்யத் தோன்றாமல்,
முதல் துளி தொடங்கி
சீற்றம் வற்றிய
கடைசித் துளி வரை
ஆனந்தமாய் மூழ்கியபோது
கண்டுகொண்டேன்
மழை எப்போதும் இன்பம்,
உடல் நனைத்தல் மட்டுமல்ல,
மனம் நிறைத்தல் கூட,
இப்போது புரிந்தது,
ஏன் மழைக் கள்ளன் என்பதுவும்……
 

காதலும் கற்று மற….

•செப்டம்பர் 21, 2007 • 1 மறுமொழி

kathalumkatrumara-2.jpg

கனவுகள் புகுந்து
இதயம் திருடியபோது
நான் விழித்திருக்கவில்லை,
இன்று வெறுமைகள்
விழுங்கித்தவிக்கும்
என் நினைவுகளில்,
உன் நேசம் சொல்கிறது
காதலும் கற்று மற…
கற்றல் உயிர்த்தெழுதல்,
மறத்தல் உயிர் மறித்தல்…..
என்ன செய்யச் சொல்கிறாய்,
எதுவாயினும் இனிமையே,
நீ அருகினில் இருக்கும்வரை…

தொடக்கத்தின் முடிவு….

•ஆகஸ்ட் 31, 2007 • 1 மறுமொழி

thodakkam.jpg

சரி எது தவறு எது
விளங்காமலேயே
நகர்ந்துவிடும் நாட்களில்,
சரியாகவே நிகழ்ந்துவிடுகின்றன
அத்தனை தவறுகளும்!!!
தவறுகள் திருத்தப்படுமுன்,
திருத்தப்பட இயலாமலேயே போய்விடுமோ…
அச்சமும் பரிதவிப்புமே
விழிகளில் எப்போதும்
தேங்கி இருக்கிறது….

அத்தனையும் விடுத்து
புத்தம்புதிதாய்
சிறகடித்துப் பறக்க ஆசைப்படும்,
ஒவ்வொரு விடியலின் தொடக்கமும்,
உன் நினைவுகளின் வாசனை தெளித்து,
மு(ம)டிந்தே பிறக்கிறது….
துவங்காத தொடக்கத்தின்
இறுதி ஊர்வலம் மட்டுமே
நான் காணும்
ஒவ்வொரு நிகழ்காலமும்……
புரிந்துகொள்ள விரும்பும்
அத்தனை சறுக்கல்களும்
புரியாமலேயே இருந்துவிடாதா,
நிச்சயமாக தவிக்கும்
பச்சை மனது……

இருட்டின் காதலி….

•ஜூலை 30, 2007 • 4 மறுமொழிகள்

dark.jpg

இருட்டின் மீதிருக்கும் மோகம்
இன்றளவும் குறைந்ததேயில்லை எனக்கு…
மெல்லிய சோகம்
என்னைக் கட்டியனைக்கும்போது,
ஆழ்மனதின் பேரிரைச்சல்
ஆடும் ஆனந்தக்கூத்துகளை,
அடக்கியாளும் திறமை,
மொளனமான இருட்டுக்கு
மட்டுமே சாத்தியம் என்பதாலேயோ,

சட்டென்று சன்னமாய்
மனதை கொள்ளைகொண்டுபோகும்
சிறு தீபச்சுடரின்
வெளிச்சத்தை பரிணமிக்கும்
அசாத்திய பின்னூட்டம்
வெளிச்சமில்லா இருட்டுக்கு
மட்டுமே சொந்தம் என்பதாலேயோ,

சத்தமில்லாமல் மொத்தமாக
காற்றோடு களவாடப்பட்டு,
நிகழ்கால சறுக்கல்களை
நிஜமாக மறந்து
உயிரோடு நிழலாக
பயணம் செய்யும் என்
இரவுகளின் விடியல் இருட்டு என்பதாலேயோ,
இந்த உலகத்தின் வெளிச்சத்தை
முதன்முதலாய் உணருமுன்,
என் முதற்பார்வை பதிந்த
அம்மாவின் கருவறை
இருட்டு என்பதாலேயோ,

ஒவ்வொரு விடியலையும்
நம்பிக்கை விதை தூவி
புதிதாகப் பூக்கச் செய்யும்
எல்லா இரவுகளின்
மொழிபெயர்ப்பும் இருட்டு என்பதாலேயோ,
என்னவோ,
இருட்டின் மீதிருக்கும்
என் காதல் தணிவதேயில்லை….

வெப்பத்தின் நிழல்

•ஜூலை 2, 2007 • 3 மறுமொழிகள்

vepathin-nilal.jpg

தூரத்தில் தெரிகிறது
ஒரு வெப்பத்தின் நிழல்….
பிடிக்க இயலுமா
தெரியவில்லை….

அதைத் தொட்டுவிடத் துடிக்கும்
ஒவ்வொரு மனமும்,
விட்டு விட்டே போகிறது…
ஒவ்வொரு இலையும் காய்ந்த
சருகாக உதிர்கையில்,
மிச்சமுள்ளது
பட்டை மரம்தான்….

ஒற்றைத் துளி கண்ணீருடன்
ஓயாது உழைக்கும்
தனிமைப் பயனத்தின்
நடுவழியில்,
ஆள் அரவமற்ற காட்டினில்,
ஊளையிடும் காற்றினில்,
நடுநிசியில் கத்திடும்
அந்த குயிலின் குரல்….
யாருக்காவும் என்றில்லை,
தன் உணர்வுகளின்
அரங்கேற்றமாக வெளிப்படும்
அந்தக் குரலில்
எதிர்பார்ப்பும் இல்லை,
ஏமாற்றமும் இல்லை….

வானம் அள்ளித்தெளித்த
நீலவண்ணம்,
என்னைப் படர்ந்து
இழுத்துச் சென்றது…
என் பயணம்
வெப்பத்தின் நிழலைத் தொடுவதா,
இல்லை வெப்பத்திற்கு இரையாவதா?

புரியவில்லை….
எனக்குத் தெரிவதெல்லாம்,
நான் வெப்பத்திற்கு
இப்போது இரையாகிறேன்…

ஜன்னலோரக் கனவுகள்

•ஜூன் 21, 2007 • 4 மறுமொழிகள்

kanavugal.jpg

என் ஜன்னலுக்கு
தெரிந்திருக்கக்கூடும்,
நீ என்னருகில் இல்லையென்று,
கம்பிகளை வெறித்துப் பார்த்தபடி
சிந்தனையில் மூழ்கியிருக்கும்
என் முகத்தின் விசனத்தில்
அது கண்டுபிடித்திருக்ககூடும்……

உறக்கமில்லா இரவுகளையும்,
இரக்கமில்லா விடியல்களையும்,
பரிசாகத் தந்துவிட்டு,
விலகிச் செல்கிறாயா
விலக்கிச் செல்கிறாயா என
விளங்காமல் அழுதிருக்கும்
என்னை பரிதவிக்க விட்டுச்செல்லும்போது,
உன்னை எப்படித்தான்
சமாதானப்படுத்துவேன்,
நான் உன்னை மிகவும்
நேசிக்கிறேன் என்று,

தெரியவில்லை……

தொலைந்துபோன கனவுகளுக்காய்
நீ வருத்தப்படுகையில்,
என்றோ கலைந்துபோன
என் தூக்கங்களை,
நான் தேடவே விரும்பவில்லை.
அது கிடைத்துவிட்டால்,
உன் கனவே என்னை
தொலைத்துவிடும்…..
 

விழியில் வழியும் நினைவுகள்…

•ஜூன் 14, 2007 • 3 மறுமொழிகள்

மனம்
அழுதிடும்போதும்
உனையே தேடும்,
அழுகைக்கு காரணம்
நீயாக இருப்பினும்….

தனிமையின்
தேடல்கள்
உனையே சாரும்….
உன்னைப் பிரிந்த
தனிமையானாலும்…..

எதுவாக இருப்பினும்,
எல்லாம்
உன்னைச் சுற்றியே
சுழலும்வரை
எனக்குக் கவலையில்லை
நீயென்று நானிருப்பதனால்…

க.பி-ஒரு முழு நீள சோகக் கதை….

•ஜூன் 12, 2007 • 4 மறுமொழிகள்

க.மு-க்கும், க.பி-க்கும், ஆறு வித்தியாசம் இல்ல, எட்டு வித்தியாசம் இல்லீங்க, எல்லாமே வித்தியாசம்தான்….ஒரு இரண்டு மாசம், நல்லா ஊரை சுத்திக்கிட்டு, தேன் நிலவு போயிட்டு வந்துட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வருவாங்க. இங்கதான் நம்ம கதை ஆரம்பிக்குது!! கல்யாணத்துக்கப்பறம் தான், நம்ம ம.பி ஆபீஸ்-ல ரொம்ப பொறுப்பான ஆசாமியா மாறிடுவாரு.

எல்லா வேலையும் நிஜமாகவே இழுத்து போட்டுட்டு செய்றதென்ன, ஒரு மணி நேரம் கூட இ-மெயில் பார்க்காம வேலை செய்றதென்ன, ஆஹா ஆஹா……நீங்க வேறெங்க, எங்க வீட்டுக்குப் போனா, பொண்ணு பண்ற டார்ச்சர் அதிகமாகிடுமோன்னு ஒரு பயத்துலதான் ம.பி ஆபீஸ்-லயே தவமா இருப்பாரு!! தினமும் நைட் லேட்-ஆக வருவாரு…ஏன்னு கேட்டா ஒரு சிரிப்புதான் வரும்…(சீக்கிரம் வந்தா மட்டும் என்ன செய்யப் போறியாம்? )

நம்ம பொண்ணு ஆர்வக் கோளாறுல ம.பி-க்கு phone-ல பேசுதுன்னு வைங்க…dialogue-கை கவனிங்க மக்களே…

(call ringing…)

ம.பி: (பொண்ணு கால் பண்ணுதுன்னு தெரிஞ்சு டென்சன் ஆகி..) இப்பதான் ஒரு மீட்டிங் ஆரம்பிச்சிருக்காங்கடா….5 நிமிஷத்துல கூப்பிடறேன்….

பதில் கூட எதிர்பார்க்காம கால் கட் பண்ணிடுவாரு நம்ம ம.பி.

(எந்த ஆபீஸ்ல 5 நிமிஷ மீட்டிங் வைக்கிறாங்கன்னு தெரியலை)

அரை மணி நேரம் கழிச்சி, எப்படியோ ஞாபகம் வந்து call பண்ணுவாரு நம்ம ஆளு,,,,

ம.பி: வேலை எல்லாம் முடிஞ்சிதா?

ம.மு: உங்களுக்காகத்தான் waiting. வெளியில கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்களே என்ன ஆச்சு?

ம.பி: (அதே dialogue தான்! ஆனா இப்போ சொல்றதுதான் உண்மை!) ஒரே tension office-ல….மூணு project handle பண்றேனா, எல்ல updates-ம் நானே குடுக்க வேண்டியதா இருக்கு…என்ன பன்றது…ஒரு 1 hour late ஆகும்டா செல்லம்!

ம.மு: உங்களுக்கு இதே வேலையா போச்சு! (party tension ஆகிடும்!) சரி சீக்கிரம் வந்து சேருங்க, wait பண்றேன்!

அவ்வளவுதான் பேச்சு….note பண்ணுங்க, க.மு-ல ஒரு மணி நேரம் கதைச்சது போக, க.பி-ல இரண்டு நிமிஷம் கூட தாண்டாது….ம.பி-யும் சாப்பிட்டியான்னு கேக்க மாட்டாங்க, ம.மு-வும் என்ன செய்யலாம்னு கேக்க மாட்டாங்க. ம.பி அவசர அவசரமா, ஒரு வழியா எல்லா வேலையும் முடிச்சிட்டு பசியோட கிளம்பி வந்தா, ஆறிப்போன தயிர் சாதம் காத்துக்கிட்டு இருக்கும்.

தொட்டுக்க ஊறுகாய் தான் எப்பவும். அதுவும், கல்யாணம் ஆன புதுசுல, அம்மா போட்டு குடுத்ததா இருக்கும். இப்படியே வாழ்க்கை போகும். க.மு-ல friend birthday-னா கூட ஞாபகம் வச்சு வாழ்த்து சொல்ற ஆளுங்க, க.பி-ல எதுவுமே ஞாபகம் வச்சிக்க மாட்டாங்க.

குறிப்பா, பசங்க இருக்காங்களே, அப்பப்பா, எப்படிப்பா இப்படி type type-ஆ முழிய மாத்தறீங்க; மறக்கறதையும் மறந்துட்டும் நயா பைசாக்கு பிரயோஜனம் இல்லாம முழிப்பாங்க பாருங்க, என்னத்த சொல்றது!! (உனக்கேன் இவ்வளவு அக்கறை-னு பராசக்தி வசனமா கேக்காதிங்க!! அப்பறம் நானும் பதில் சொல்லுவேன் ” நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்” அப்படின்னு சொல்லிடுவேன்! நானும் எவ்வளவு நேரம்தான் என் life பத்தி எழுதாம இருக்கறது!)

சரி எதோ மறந்துட்டோமே, அப்படின்னு நினைச்சு, மறுநாள் கடைக்குப் போய், (கடை கடையா ஏரி இறங்கெல்லாம் மாட்டாங்க, கண்ணுல முதல்ல எந்த கடை தெண்படுதோ, அதுல நுழைஞ்சிடுவாங்க!) பழைய மாதிரியே, ஒரு crystal பொம்மை, teddy bear, key chain, saree, அப்படின்னு ஏதாவது வாங்குவாங்க… (note the point: க.பி-ல diamond pendant வரும், platinum மோதரம் வரும்னு கனவெல்லாம் காணாதீங்க, அது ஒரு கனா காலம் ஆகிடும்….கண்டிப்பா அது வராது!) Gift வாங்கிட்டு office bag-லயே வச்சிடுவாங்க.

Evening வீட்டுக்கு வந்ததும் ஏதோ பேசும்போதுதான், gift ஞாபகம் வரும்…(note the point: க.மு-ல chik and neat-ஆ dress பண்ணி டைம் பார்த்து குடுத்தது எல்லாம் நினைவில் கொள்க!) Gift-i எடுத்துட்டு வந்து ஒரு சின்ன சிரிப்போட குடுத்திடுவாங்க. நம்ம பொண்ணு என்ன செய்யும், ஆசை ஆசையா gift பிரிச்சுப் பார்க்கும்…பார்த்ததும், first ஒரு ஏமாற்றமான கண்களோடு பெரிய question mark, ஒரு ஆச்சரிய குறிதான் வரும்….(என்னடா மண்டையா gift வாங்கி இருக்க, இதுக்காடா late ஆக்கின!) என்பதுபோல் கேக்க தோணும். இருந்தாலும் பெண்களுக்கே இருக்கற பொருமையோடு(?!), நல்ல இருக்குன்னு ஒரு வார்த்தை மட்டும் வரும்.

சரி, Saree ஏதாவது எடுத்துட்டு வந்திருந்தா அவ்வளவுதான், “எப்படி எனக்கு பிடிக்காத colour-ஆ பார்த்து வாங்கி இருக்கிங்க”-னு திட்டுதான் விழும். அது எவ்வளவு costly-ஆ இருந்தாலும் same blood தான். “என்னையும் கூட்டிட்டுப் போய் எடுத்திருக்கணும்…” ஒரு ஆலோசனை வேற….இவங்க குடுக்கற expression-ல அடுத்த முறை வாங்கவே மாட்டாங்க நம்ம ம.பி. இப்படி எக்குத்தப்பா ஏதாவது வாங்கறதுக்குள்ள, all ladies, கேட்டுக்கோங்க, முதல்லயே என்ன வேணும்னு அப்பப்ப time கிடைக்கும்போதெல்லாம், போட்டு வைங்க!! அப்பதான், நம்ம வீட்டு புத்திசாலிங்க, கொஞ்சம் யோசிச்சு, உருப்படியா ஏதாவது வாங்குவாங்க!! surprise குடுக்கறேன் பேர்வழி-னு திரும்பவும் எந்த teddy bear-ம் வீட்டுக்கு வராது!

சின்னதா, என் வீட்டு விஷயம் ஒன்னு சொல்றேன், எல்லாரும் கேட்டு ஒரு உச்சு கொட்டுங்க….TV-ல saravana store விளம்பரத்துல வர்ற, sneha போட்டிருக்கற கொலுசு எனக்கு ரொம்ப பிடிச்சுப்போய், நம்ம வாங்கறதுக்குப் பதில், husband-கிட்ட ஆசையா, (வாங்கலேன்னா suspend-தான்!) “ஏங்க sneha போட்டிருக்கற கொலுசு ரொம்ப நல்லா இருக்குல்ல..அது மாதிரி ஒன்னு வாங்கணும்னு”, ஒரு birthday time-ல பிட் போட்டேன்.

நம்ம ஆளு எப்படிப்பட்டவரு! “எனக்கு sneha-வைத் தவிர எதுவுமே தெரியலை, நீ கொலுசை எங்க பார்த்த-னு” கேட்டாரே பார்க்கலாம்…வாயை மூடி அமைதியாகிட்டேன். சரி, இப்ப sneha ஞாபகத்துல மனுஷன் ஏதாவது சொன்னாலும், surprise-ஆ எப்பவாவது வங்கிக் குடுப்பார்னு நானும் எதிர் பார்த்து காத்துக்கிட்டு இருக்கேன்….ஹ்ம்ம்ம்..எங்க sneha கொலுசு போடறதுக்குள்ள, நான் சரோஜா தேவி ஆனாலும் வராது போலிருக்கு…என் பையன்தான் ஆறுதலா, “big boy ஆனதுக்கப்பறம், நான் வாங்கித்தறேன் அம்மா-னு” சொல்லி தேற்றி வச்சிருக்கான்….கதை முடிஞ்சிடுச்சு, எல்லாரும் உச்சு கொட்டுங்க……:-(

க.பி-ல அடுத்த நிகழ்வு, shopping. ம.பி கொஞ்சம் உஷாரான அளுன்னா, shopping-க்கு எப்பவும் கூடப் போக மாட்டாரு. அப்படியே போனலும், தப்பித் தவறியும் credit card எடுத்துட்டு வர மாட்டாரு. Card இருக்குன்னு நிறைய வாங்கிட்டா, அப்பறம் bill யாரு கட்டறதாம். Correct-ஆ எவ்வளவு தேவையோ, அவ்வளவுக்கு cash dealings-தான். Saree shop-க்கு போனதும், பொண்ணு ஏதாவது அழகான சேலையை புடிச்சிக்கிட்டு நிக்கும், (ம.பி-கிட்ட கருத்து கேக்கறதுக்குன்னு தப்பா நினைக்காதீங்க, அது பாட்டுக்கு அழகு பார்த்துகிட்டு நிக்கும்);

நம்ம ஆளு வந்து அப்படியே ஒரு look விட்டு, கண்ணை border-க்கு மேய விடுவாரு. (Border-ல தானே price tag இருக்கும்!!) அது ஒத்து வரலேன்னா, ” அடடா, saree நல்லா இருக்கு ஆன border தான் சரியில்லை”-னு ஒரு comment விழும். ஏற்கனவே confuse party-ஆன பொண்ணும், border சரியில்லாட்டி, டப்புனு saree-யை வச்சிடும். அடுத்த saree-க்கு போகும்…இப்படியே ஒண்னு ஒண்னா பார்த்து கடைசியில, அதுக்கும் பிடிக்காம, நம்ம ஆளுக்கும் பிடிக்காம ஒரு மாதிரியா select பன்னிட்டு வருவாங்க. வீட்டுக்கு வந்ததும்தான் ஏகப்பட்ட confusion வரும். “அந்த orange colour saree எடுத்திருக்கலாம்”. ஒரு காலத்துல english colour-ல select பன்ற புடவை, இப்ப நல்ல அடிக்கற colour-ஆ மாறிடும் பார்த்துக்கோங்க…..ஏதோ அடிச்சு புடிச்சு, ஒரு வழியா shopping முடியும்.

சரிங்க, இப்ப புரிஞ்சிருக்குமே, என்ன difference அப்படின்னு…..இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டே போகலாம். எல்லாருடைய வாழ்க்கையிலும் கண்டிப்பா, இந்த மாதிரி atleast ஒன்று இரண்டு சம்பவங்களாவது அரங்கேறி இருக்கும். பெரியவங்களா, பார்த்து நிச்சயம் பண்ண கல்யாணத்துலயே இந்த மாதிரி நகைச்சுவை இருக்குன்னா, காதல் திருமணம்? கேக்கவே வேண்டாம்….இன்னும் கலகலதான். இப்படியெல்லாம் இருந்தாதாங்க அது வாழ்க்கை.

இதுனால, நான் என்ன சொல்ல வரேன்னா……கல் எடுக்கறது புரியுது, நான் இப்போ உத்தரவு வாங்கிக்கறேன்….

என்றும் அன்புடன்…..

காதல் துளிகள்…

•மே 30, 2007 • 8 மறுமொழிகள்

kathal-thulihal.jpg

நானும் காதலிக்கிறேன்….
அழகான பொய்கள்
அடுக்கடுக்காய் கற்பனைகள்…
கொஞ்சும் காதல்
கொஞ்சம் காமம்,
நிறைய சீண்டல்
உயிர்த்தீண்டல்…
வெட்டிக்கதைகள்,
குட்டிக் கவிதைகள்,
பூக்களில் ரோஜா,
பைகளில் சாக்லேட்….
இவைகளே சாட்சி,
நானும் காதலிக்கிறேன்…