விழியில் வழியும் நினைவுகள்…
மனம்
அழுதிடும்போதும்
உனையே தேடும்,
அழுகைக்கு காரணம்
நீயாக இருப்பினும்….
தனிமையின்
தேடல்கள்
உனையே சாரும்….
உன்னைப் பிரிந்த
தனிமையானாலும்…..
எதுவாக இருப்பினும்,
எல்லாம்
உன்னைச் சுற்றியே
சுழலும்வரை
எனக்குக் கவலையில்லை
நீயென்று நானிருப்பதனால்…

//மனம்
அழுதிடும்போதும்
உனையே தேடும்,
அழுகைக்கு காரணம்
நீயாக இருப்பினும்….//
வாவ்… அனுபவிச்சு எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்
Too Good!
kadala pathi evlovu kavithai padichalum, ezhuthinaalum salipathillai.
anbudan,
shangaran.