உன்னோடு தினம் தோறும்..

ma.jpg

விரலோடு விரல்சேர விதியொண்ணு வேணும் – உன்
இதழோடு இதழ்சேர பொழுதொண்ணு வேணும்
மனசோடு மனம்சேர விழிப்பார்வை வேணும் – உன்
மெய்யோடு மெய்சேர எப்போதும் தோணும்

பார்வைக்குள் எப்போதும் உன்னோட வதனம் – ராப்
போர்வைக்குள் எப்போதும் குறும்போட வரணும்
வேர்வைக்குள் விளங்காத மோகத்தை தரணும் – இது
நாள்தோறும் இருந்தாலோ எனக்கேது மரணம்

மாமாநீ பொட்டு வெச்ச நெத்தியில வாசம் – அது
ராமான்னு இருந்தவளை தொட்டுவிட்டு வீசும்
சாகா வரமொன்னு வேணுமான்னு கேட்டா – அன்பு
சாகா வரம் மட்டும் போதுமின்னு கேப்பேன்

~ by janasara மேல் மே 3, 2007.

4 பதில்கள் to “உன்னோடு தினம் தோறும்..”

  1. Really fantastic poem – Keep up the good work.. !

    The line which is impressing and touching is

    “saaga varamonnu venummaanu ketta – anbu saaga varam mattum pothumunnu keppan “

  2. Thanks Karthik. Thanks for your encouragement !

  3. anbu saaga varam than niramtharam….Great lyrics and Great meaning…

  4. மாமாநீ பொட்டு வெச்ச நெத்தியில வாசம் – அது
    ராமான்னு இருந்தவளை தொட்டுவிட்டு வீசும் – கலக்கறீங்க போங்க …

மறுமொழி இடுக