சலங்கைக் காலங்கள்
எங்கோ
ஒலிக்கும் சலங்கையின்
மெல்லிய ஓசை
மனத் தோட்டத்தின்
மலர் கொய்கிறது.
சலங்கையின்
புன்னகை விரகள்
என்
கால்களைப் பற்றிய
காலங்களைப் பற்றியும்,
சபைகளின் முகங்களின்
என்
பாதங்களில் வழிந்த
நாட்டிய நதிகளைக் பற்றியும்,
என்
இளமையின் குறிப்பேட்டில்
காணப்பட்ட
கனவுகளின் கல்வெட்டுகளைக்
குறித்தும்,
புகை மூடிய
மலைப்பாதையில் மிதக்கும்
முகங்களென
தெளிகின்றன நினைவுகள்.
வருடங்கள் ஓடிவிட்டன,
பொருளாதாரம் என்
சலங்கைக் கனவுகளை
சிரச்சேதம் செய்ததும்,
சூழல்களின்
நெருஞ்சிச் செடிகளால்
நெருக்கமாய் சூழப்பட்டதும்,
விழியோரம் கசியும்
துளிகளில் தெரிவதாக
கடவுள் எந்தன்
காதோரம் சொன்னார்.
முடிந்து போனவை
துக்கத்தின் எச்சங்களல்ல
ஆனந்தத்தின் மிச்சங்கள்.
இறக்காத நிகழ்வுகள்
உயிர்ப்பதில்லை
பிரமிக்க வைக்கும்
பிரமிடும்
முடிந்து போன வாழ்வின்
மிச்சம் தானே.
இனி நினைவுகளின்
தூர்வாருகையில்
தொலைந்து போனதற்காய்
துக்கப்படுவதை விடுத்து,
தொலைக்கவேனும்
வைத்திருந்தேனே
என்று
ஆனந்தம் கொள்ளச் சொல்கிறான்
நண்பன் ஒருவன்
ஃ


i’m hairath from srilanka, its really nice. hopefully u’ll write better poems.
Im not aware that you have such a great talent….when i saw your poems for the first time…….Really nice to read….Keep it up…
Thanks Karthik. Please visit frequently.
//i’m hairath from srilanka, its really nice. hopefully u’ll write better poems.//
Thanks for visiting Hairath.. I will try to write better poems